34. கூற்றமோ கண்ணோ பிணையோ


இன்னா சார் சொல்றது? உசிருன்னு பாத்தாக்கா அல்லாமே பூச்சிதானே சார்… நீ நான் இந்த அக்கா அம்மா அப்பா தாத்தா அல்லாரும் பூச்சிங்கதான். பேசறோம் நடக்கறோங்காட்டி குணம் மாறி போய்டுமா?

பாத்திரம் ஈரமா கீழ கெடந்தா போற வர்ற நாய் நக்கும்டா இன்பராசு னு வனக்குயில் அக்கா ஒருவாட்டி சொல்லிச்சு.

ஆண் நாயா அக்கான்னு கேட்டேன். பொட்டை நாயும் நக்கும்டானு அவிக சொன்னாங்க. தப்பில்லையே சார்.

பசிக்கு சோறு.. சாராயம். வொடம்புக்கு பசிச்சா இன்னொரு பூச்சி. இந்த செலந்தி சார்…பூச்சி… அது அல்லாம் பண்ணிட்டு கடுவனை பொட்டை பூச்சி அடிச்சி முழுங்கி சாப்பிட்டுடும். பசி சார். அதுக்கு முன்னாடி அல்லாமே ஒன்னுமில்ல. பசிலே வவுறு வேற வொடம்புக்கு வேறென்னு இல்ல சாரே…

நாமளும் அதான் சார். பூங்கொலலி ஏன் செத்தானு சொல்ல தெரில. ஆனா அவளை சாப்பிட்ட பூச்சிங்க எத்தனை தெரிமா சார்? அதான் வாழ்கெ. வந்தமா போனோமானு இருக்கணும் சாரே. அந்த அக்கா பாருங்க, சிரிக்கறாக… தப்பா சார்?

இல்லை. இன்பராஜா நீங்க சொல்லுங்க. பெண் ஆண் இந்த ரெண்டுமே நல்லது கெட்டதுனு மாதிரி ஏதோ இருக்கு இல்ல. வாழ்க்கைக்கு அர்த்தம் னு பாத்தாக்கா…

மசிறுதான் சார். நீள மசிறு குட்டை மசிறு அப்பறம் இது..  தன் இடுப்பை மேலே சற்று தூக்கியயும் கீழே இறக்கியும் ஆட்டி ஆட்டி காட்டினான். வேற ஒண்ணும் இல்ல சாரே வாழ்க்கைன்னா சொல்றது மாதிரி.

புனேலே இருந்து ஒரு பொண்ணு ஹிந்தி சினிமால நடிக்கிறேன்னு வந்துச்சு. அந்த தகவல் என்கிட்டே தகவல் வந்துச்சு. ஆள் வச்சு பிடிச்சு ரூமில் அடைச்சு போட்டேன். ஆனா நான் அங்கெனே போவலை.

ராஜேவாடே டிஸ்ட்ரிக் நாலு ஆளுங்களை சத்தங் காட்டெமே இறக்கினேன். ராவும் பகலும் சோத்தை போட்டுட்டு அவளை பசங்க விடாமே ராவும் பகலுமா துடிக்க துடிக்க அள்ளி அள்ளி சாப்பிட்டானுங்க…

கொறை உசிரா கெடந்தா… அப்பன் ஆத்தா நல்ல உசந்த வேலைக்காரவஹ. தேடுராஹனு தெரிஞ்சு போச்சு. அக்கா வூட்டுக்கு அனுப்பிட்டோம். பத்தே நாள்தேன்… தொழிலில் இறக்கிட்டோம். எப்படி சார் இது? இப்ப பேச்சு மூச்சு இல்ல அந்த அப்பா அம்மா கிட்டேயிருந்து… தெரியுமா சாரே என்றான். அந்த பொண்ணு இப்ப கொழிக்கிறா. பள பளன்னு இருக்கா.

இது பாவமில்லையா என்றாள் மெஸ்ஸி.

யக்கா… இன்பராஜா தன் வலது கையால் வாயை மூடி ஆள்காட்டி விரலையும் பின் நடு விரலையும் உதட்டுக்கு கீழ் லாவகமாக விரித்து தன் மொத்த நாக்கையும் அதன் வழியே தொங்கவிட்டு ஆட்டி ஆட்டி சுழற்றி காட்ட மெஸ்ஸி அருவெறுத்து பார்த்தாள்.

இதாங்க்கா உலகம் என்றபடியே கையை எடுத்து துடைத்து கொண்டான். மெஸ்ஸி ஷிவாவை பார்க்க அவன் கண் அசைத்து அமைதியாக இருக்க சொன்னான்.

பொண்ணுன்னா அவ்ளோ வெறுப்பா உனக்கு இன்பம்?

அல்லாருக்குமே சார். இப்ப எல்லாம் நம்ம  பொண்ணுங்க இன்னா கேக்குது சார். ஒரு பையனை பிடிச்சு போச்சு அதுங்காட்டி கெல்யாணம்னு இருக்கா… இல்ல சாரே.

ரூபாலி தெரியுமா? நல்ல பெரிய பெரிய காலேசுல மொறட்டு படிப்பு படிச்சவதான். நல்ல கொழுத்த காசுக்கார குடும்பம்தான்.

அங்கனே காலேசுலே படிச்ச அம்புட்டு ஆம்பிளை பயலுவலும்  அவ சூத்துக்கு பின்னாடி வெக்கமில்லாமே அலைஞ்சு திரிஞ்சானுவ.

அவ சீந்தவே இல்லயே. அதுக்காவேண்டி அவளை நீங்க தீ மாதிரினு நினைக்காதீய. ரூபாலி மனஸுக்குள்ளார ஒரு கணக்கு போட்டு வெச்சிருந்தா.

பெரிய கார் பெங்களா அம்சமான பாடி அதான் சாரே கட்டுமஸ்தான பாடி.. அல்லாம் வோணும்னு வல வீசிட்டு கெடந்தா…

நடுத்தர வர்க்கத்து பயலுவ ஒடம்பு ஏத்தி அதை மெயின்டன் பண்ண செலவு ஆவுமே. முடியுமா சார்..

சோத்துக்கு நாலு எடம் ஏறி இறங்கி பல்லை காட்டி சூத்துலே மிதி வாங்கி அலஞ்சு இளுத்து போட்டு வேலை செஞ்சாத்தானே கவுறதையா கஞ்சி குடிக்க முடியும்.

ஆனா ரூபாலி அப்படி கெணக்கு போட்டு அந்தமானிக்கே ஒருத்தனை பிடிச்சா. அவன் நல்ல வாட்ட சாட்டமான ஆளுதேன். பெரிய பணக்காரன் கூட.

ஒரு பிள்ள பெறந்ததும் ரூபாலி ஆளே மாறி போய்ட்டா. உடம்பு பெருசா வச்சிருச்சு. புருஷன்கிட்டே ஒரு நாள் ராத்திரி அவனோட காலை சொரண்டி ஜட்டியோட கவட்டையை காட்டி இருக்கா. அதுக்கு அவன் இன்னா சொல்லி இருக்கான் தெரியுமா சாரே அவகிட்ட…

ரூபாலி.. ரூபாலி.. முத முத நீ பாக்க ரம்பை ரதி கெணக்காத்தான் இருந்தே. புள்ளன்னு ஒன்னு ஆனதும் பச்ச ஒடம்புக்காரின்னு நீ நல்லா பெருச்சாளி மாதிரி துன்னு துன்னு இப்ப ஒடம்பெல்லாம் உப்பி போச்சு.

கழுத்துக்கு கீழே வெறும் வவுறா போச்சு. உன்ர தொப்புள் ஓட்டைலே ரெண்டு இட்லிய அடைச்சு  போட்டாக்கூடியும் அதும் உள்ளார போய்டும்னு பொரண்டு தூங்கிட்டான். பொம்பளை பூச்சிக்கு பேச்சு மூச்சில்லாமே போச்சு சாரே…

உனக்கு எப்படி தெரியும் இன்பராஜா?

கான்ஷிராமு… அவந்தான் சொன்னான். வூட்லே செப்டிக் டேங்க் கிளினு பண்ண போனவன் அவளையும் சமையக்கட்டுலே மடக்கி பண்ணிட்டு வந்து சொன்னான். அவதான் இதர் ஆவோ இதர் ஆவோன்னு கூப்பிட்டு மொத்தமா தூக்கி வழிச்சி காட்டிட்டு நின்னாளாம். பசிச்ச வொடம்புக்கு தரமென்ன பவிஷு என்ன சாரே. நல்லா பண்ணிவிட்டு வந்தேன் இன்பராசுன்னு அவன் சொன்னான். அன்னிக்கி ரவைக்கு நான்தான் அவனுக்கு சரக்கு வாங்கி குடிக்க கொடுத்தேன்.

சாரே, எங்க பொழப்பு பத்தி அல்லாரும் எப்படி பேசுவாஹனு நல்லாவே தெரியும். எங்க கூட வாங்க இங்கன மொத்த அழுக்கும் ஆராரு மேலென்னு காட்டுறேன். எல்லாமே பூச்சிதானே சார் என்றான்.

ஷிவா ஒரு முழு விஸ்கி பாட்டிலையும் சில பணத்தையும் கொடுத்து அவனை அனுப்பி வைத்தபோது மெஸ்ஸி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.