நயன்தாராவின் செக்ஸ் சிக்கல்


பிரதிலிபி என்னும் செயலியில் நீக்கப்பட்ட கட்டுரை.

சிலரின் ஆதங்கம் நம் சொந்த வேலையை நகர்த்தி வைத்துவிட்டு ஏதேனும் எழுத வைத்துவிடும்.

இன்று நேத்ராவின் “உள்ளங்கையில் போனும்”… கட்டுரையை படித்தேன். அவள், அத படிச்சிட்டு வஞ்சிறாதீக என்ற முன் குறிப்பும் எனக்கு முன்னே அனுப்பியும் இருந்தாள்.

நேத்ராவைபோல் பலரும் இருக்கலாம். இதனால் பலரும் இங்கிருந்து விலகி இருக்கலாம். எழுதாதும் எதுவும் விமரிசிக்காதும் வாசித்து கடக்கலாம். குறுஞ்செய்தி மூலமே நட்பை தொடரும் நிலையும் இருக்கலாம்.

லிபி மட்டும் அல்ல எந்த இணைய சமூக வலைத்தளங்களும் ஓரளவு மேல் யாருக்கும் உதவ முடியாது. அதற்காக பின் நழுவி செல்லவும் கூடாது.

பெண்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத ஆனவர்கள் என்று சரளமாக இயங்கும் இந்த தளத்தில் ஸ்பரிசன் ஏன் செக்ஸ் சார்ந்த ஒன்றை மையமாக்கி எழுத வேண்டும் என்று கேட்டால்? அது எழுத நேர்ந்தது என்றால்? அவசியம் என்பதை உணர்ந்ததால் மட்டுமே.

பாலியல் குறித்து ஒரு ஆண் பெண்ணிடம் பேசுவதுதான் முறை. ஆணிடம் ஆண் கேட்டால் அது என்ன ஒழுங்கு? உறவு?

ஒரு பெண் மாதவிடாய் அனுபவத்தை சொல்லும்போது என் தொடைகள் நடுங்குவதை உணர்ந்துள்ளேன். மாதவிடாய் சரியாக வரவில்லை என்று ஒரு பெண் கண்ணீர் விடும்போது அது கேட்டு குறுகிப்போய் உள்ளேன்.

தன் மாதவிடாய் குருதி படிந்த நேப்கின் போட்டோவை அனுப்பி வைத்த என் முன்னாள் கேரள காதலியின் வலி இன்னும் எனக்குள் அப்படியே இருக்கிறது. அவள் happy period என்று எழுதி அனுப்பி இருந்தாள். மன உறுதி கொண்டவள் அவள்.

ஆக, பாலியலில் என்ன அவசியம் என்பது நாமே நம்மிடம் கேட்டுகொண்டு நாமே முடிவு செய்ய வேண்டிய ஒன்று அல்ல.

வாசகர் ஈர்ப்புக்கு இதை ஸ்பரிசன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

நொதுமிக்கும் வனக்குயிலுக்கும் உள்ள வாசகர்கள் தொகையை நாம் ஒப்பிட்டால் எந்த தளத்தில் இயங்கி கொண்டிருக்கிறோம் என்பது புரியும்.

வனக்குயில் பருவகுயில் இந்த இரண்டுக்கும் உள்ள வாசகர் தொகை இன்னும் யோசிக்க வைக்கிறது. பருவகுயில் எளிதில் கடந்து செல்ல முடியாது. ஒருவரின் ஜாதி, மதம், அரசியல், ஒழுக்கம் குறித்த அனைத்திலும் காழ்ப்புணர்வுடன் கூடிய ஒரு விமர்சனம் அது கொண்டிருக்கும்.

ஆக, விரும்பினாலும் விரும்பாது போனாலும் செக்ஸ், வன்முறை, இதை நிர்வகிக்கும் அரசியல், தத்துவம் கலந்துதான் நம் வாழ்க்கையும் நமது குடும்பமும் பயணிக்கிறது.

Erotic என்பது ஒரு சொல் அல்ல. அதன் பிரிவுகள், உட்பிரிவுகள், குழுக்கள், உட்குழுக்கள் என்றெல்லாம் தெளிவாக தெரிய ஒரு porn web page இல் சில காலமாவது உலவ வேண்டும். அல்லது அது குறித்து படிக்க வேண்டும்.

எந்த பிட்டு செமையா இருக்கும் என்று ஆவலாக உலவுவது என்பது பல்வேறு பெயர்களில் இங்கே திரியும் நமது அன்பிற்குரிய fake id நயன்தாராவுக்கு வேண்டுமாயின் பொருந்தலாம்.

எழுத விரும்பும், எழுத்தின் வழியே தன்னை புரிந்து கொள்ள ஆவல் கொண்ட யாவருக்கும் அது கல்வியாக மாறிவிடும். கல்வி பொறுப்பு சார்ந்தது.

என் நண்பன் பார்க்க மறுக்கும் ஒரு ஆபாசபடமானது அவன் பெற்ற ஆண் அல்லது பெண் குழந்தை ஆவலாக பார்ப்பதற்கு இந்த சமூகம் கற்றுத்தர தீர்மானத்துடன் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

17ம் நூற்றாண்டிலேயே பாலியல்சார் கவிதைகள் கதைகள் ஓவியங்கள் என மேற்கும், கிழக்கும் பல பதிவுகளை உருவாக்கி இருப்பது அதனிலிருந்து நாம் வெளியேற அல்ல, கொண்டாட.

டிஜிட்டல் ஊழியில் அது இன்னும் அதிவேகமான பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறது.

ஒருவரின் உணர்வுகளோடு இதை வைத்து ஆழமாக சீண்டலாம் என்று ஒரு மனித மனம் தறிகெட்டு செல்வது வெறும் வேடிக்கை மட்டுமே.

என்னை ஏன் இப்படி வைத்து நீ புரளி எழுதுகிறாய் என்று நயன்தாராவை பார்த்து நாம் கேட்டு கொள்வதில் அது அப்படி எழுதுவது பார்த்து நாம் விசனம் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

நயன்தாராவின் சாடிச குணமும் பாதிக்கப்படுவோரின் மெஸோகிஸம் ஒன்றிணையும்போது ஆக அதிகமாய் தளர்ந்து போவது பாதிக்கப்படுவோர் மட்டுமே.

லிபி என்ற தளம் சிலருக்கு வீடு. சிலருக்கு காடு. சிலருக்கு உலகம். சிலருக்கு சிறைச்சாலை. சிலருக்கு சூதாட்ட களம். சிலருக்கு விபச்சார மையம். ஆக இதுவும் ஒரு சமூகம்.

மனித இனம் சமூகத்துக்கு முன்னே மண்டியிட்டு பழக்கம் கொண்டது. நம் பண்பாட்டு கலாச்சார மரபு ஒழுக்கம் இவையெல்லாம் உருவாக்கி கொடுத்த ஒரே தீர்வு எதுவென்றால் நம்மை எப்படி நாம் புனிதமாகவும் ஒழுக்கமாகவும் காப்பாற்றி கொள்வது என்பதும் அதை தொடர்ந்து காப்பாற்றி கொள்வது என்பதும்தான்.

ஒரு படைப்பாளி இதை முற்றிலும் நிராகரித்து பார்க்கிறான். அந்த தீவிர நிராகரிப்பு மட்டுமே அவனை எழுத வைக்கிறது. எழுத சிந்தனை என்பது அவசியம். சிந்தனைக்கு மீறல் என்பது அவசியம்.

நீங்கள் எழுத விரும்பினால் நிராகரிக்க தொடங்க வேண்டும். நிஜத்தில் கூட அல்ல, குறைந்தபட்சம் கற்பனையில் கூட அவற்றை கேள்விகளால் ஹிம்சிக்க வேண்டும். அந்த ஹிம்சை நம்மையே வதைக்கும். அந்த வதையில்தான் உயிர் ஜனிக்கும். அதுதான் நாம் தேடும் படைப்பு.

பெரியார் பெயரை முன்வைத்து பெண் விடுதலை குறித்து எழுதி அதைப்பற்றி நான் பேச அழைக்கும்போது வராது கம்’மென்று இருந்து இடத்தை காலி செய்துவிட்டு போனவர்கள் இங்கேயே உண்டு.

பெண் பெயரில் ஆண்களாக இருந்து தூண்டிலிட்டு உறுமீன் கிடைக்க ஓடி போனவர்கள் அவர்கள்.

தனக்கு திருமணம் ஆகும்வரை சிக்கியவர்களுடன் சல்லாபித்து ஒரே சமயத்தில் ஒரே வசனத்துடன் ஆறு பேருடன் சல்லாபித்து திருமணம் ஆனவுடன் இழுத்து மூடி இன்ஸ்டன்ட் கற்புக்கரசிகளாகி விடுவதும் உண்டு.

ஆண் பெண் என்று இப்படி பேதமற்று இருக்கும் டிஜிட்டல் உலகில் நாம் பல எதிர்மறைகளை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

Youtube இல் அரசியல்வாதிகள், நடிகர்கள், ஆன்மீகவாதிகள் வாங்காத வசவுகளா?

ஆனால் நம் அன்பான நயன்தாரா எல்லை மீறுவதே இல்லை. அது தன் மனக்கண்ணில் ஜோடி சேர்த்து அழகு பார்த்து ரசிக்கிறது. குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? ரசிக்கட்டும் என்று விட வேண்டியதுதான்.

எழுதி காமத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் ஒரு துணை (ஆண்/பெண்) நமக்கு கிடைத்துவிடும் என்பது சற்றே ரசக்குறைவான விஷயம்தான்.

நான் அப்படி எழுதவில்லை என நம்புகிறேன். என் கவிதையில் அனுபவம் குறித்த (உண்மையில் எனக்கு செக்ஸ் அனுபவம் இல்லை) ஒரு தேடல் இருக்கும்.

ஒரு டார்மியட்ரி… பெரிய சுவர்கள். பரண் மேல் அமர்ந்து கிழிந்த சாக்கால் மறைத்துக்கொண்டு ஒரு மொபைல் வழியே கீழே நிகழும் காட்சிகள் படம் பிடிக்கப்படுகிறது. சாக்கின் கிழிசல் வழியே காட்சி ஓடுகிறது.

ஒரு எழுபது வயது மனிதன். ஒரு பெண்ணை தூண்டுகிறான். அவள் பெண்ணுறுப்பை அழுத்தி வசியம் செய்கிறான். அவள் இணங்கி காரியம் முடியும்வரை காட்சிகள் ஒரே கோணத்தில் பதிவாகிறது.

இதைவிட அதை அறைதான் என்னை மிகவும் ஈர்த்தது.

ஆஸ்பெடாஸ் கூரை. சில இடத்தில் அட்டைகள் செருகப்பட்டு இருந்தது. காரை பெயர்ந்த சுவர். ஓட்டை பேன். தாறுமாறாக கொடியில் தொங்கும் புடவை, பைஜாமாக்கள்.அழுது வடியும் பழைய விளக்கு. பழைய கட்டில். சுத்தம் என்பதே தெரியாத தரை. அதில் சிந்தி கிடக்கும் உணவுகள். இத்தனையும் தாண்டி மன்மதனின் தாக்கம்.

அந்த அறைதான் என் கவிதைக்குரிய கருப்பொருள். காமம் ஒரு சொட்டு மட்டுமே எழுத்தில் விடுகிறேன்.

லிபியில்…

காமமே ஒரு வாழ்க்கையாக கற்பிக்க நான் எழுதுவது இல்லை. அதற்கு ஒருவர் அல்லது சிலர் இருக்கலாம்.

என் மதிப்பிற்குரிய ஒரு தோழமை என் கவிதை காப்பி செய்து அதனை தன் பக்கத்தில் போட்டுக்கொண்டு…

தகவல் கொடுத்து காட்டியபோதுதான் எனக்கும் தெரிந்தது. புகார் செய்தேன். அவரும் இதை படிப்பார் என்று நம்புகிறேன். (காட்சி உரு இணைத்து உள்ளேன்). தலைப்புமா சேர்த்து காபி அடிப்பீர்கள்?

என்னிடம் சொல்லிவிட்டு என் பிரதியை ஒரு நன்றி அறிவிப்போடு பயன்படுத்தி கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் அடுத்த முறை இப்படி செய்யக்கூடாது. தன் சுய அரிப்புக்கு தானே சொறிந்து கொள்ள அவர்தான் பழக வேண்டும்.

போகட்டும்.

ஒரு நபர் எந்த பதிவும் இல்லாது உங்களுக்கு வந்து சேர்ந்து ஆவலாக பழகினால் அது அதிகபட்சமாக fake id மட்டுமே.

அவர் உங்களுடன் பேசும்வரை நீங்கள் காத்திருக்காமல் நீங்களே அவருக்கு வணக்கம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி கையோடு ஸ்பேமிங் என்று பிளாக் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போகலாம். ஊசி எப்போதும் இடம் கொடுக்கக்கூடாது.

சிலர் கடமைக்கு ஓரிரண்டு பதிவு போட்டு வருவார்கள். அது இரண்டு ஒன்று வருடங்களுக்கு முன் என்றால் fake ஆக இருக்க வாய்ப்பு குறைவு. வெகு சமீபம் என்றால் நாம் யோசிக்க வேண்டும்.

ஸ்டார் குறித்து எனக்கு அக்கறை இல்லை என்பதால் அதிகம் சொல்ல தெரியவில்லை.

நம் நண்பர்கள் பின் எதிரிகளாகி அவர்களே fake அவதாரம் எடுத்தால் எதுவும் செய்ய இயலாது. உங்களுக்கு ஒருவர் fake என்று தெரிந்தால் அதை ஸ்டேட்டஸ் அல்லது பிரதியாக போடலாம். நண்பர்களுக்கும் சொல்லலாம். எளிய மனம் கொண்ட நபர்களுக்கு இதுதான் ஒரே வழி.

நான், படைப்பாளிகள் என்பவர்கள் fake நபர்களை கொண்டாட வேண்டும் என்றுதான் அழுத்தி சொல்வேன்.

நன்மை தீமை, இன்பம் துன்பம் மகிழ்ச்சி துயரம் என்றெல்லாம் நாம் மனிதரை, உணர்வை, உணர்ச்சிகளை வைத்து எழுதுவதற்கு ஆர்வம் துடிப்பு கொள்ளும்போது, கூடவே முகம் மறைத்து பயணிக்கும் ஒரு நபர் மெல்ல மெல்ல பைத்தியம் ஆகிக்கொண்டு இருப்பதை கருணையோடு மட்டுமே பார்க்க வேண்டும். அவருக்கு உதவ வேண்டும்.

அவர் நமக்கான ஒரு fake id யாக உருவாகி வருவதற்கு எத்தனை முறை எத்தனை விதமாக நம்மைப்பற்றியே சிந்தித்து இருக்க வேண்டும். எப்படி எல்லாம் உழைத்து இருப்பார். அதை எல்லாம் நினைத்து நகைப்புடன் கடந்து செல்ல வேண்டும்.

செக்ஸ் குறித்து நம்முடைய அறிவு தெளிவாக இருக்க வேண்டும். வெறும் வார்த்தைகள் வரும் உச்சம், காட்சிகள் மூலம் வரும் உச்சம், உடலுறவு மூலம் வரும் உச்சம் என்பதில் வேறுபாடுகள் இருக்கவும் செய்யும். வேறுபாடுகள் இல்லாமலும் இருக்கலாம்.

உடலுறவு மூலம் திருப்தி அடையாத, அடைய முடியாத தம்பதிகள் கூட உண்டு. இதில் உச்சம் அடைந்தே தீர வேண்டுமென்று மெடிக்கல், கவுன்சிலிங் செல்வோரும் உண்டு.

மனம்தான் உச்சத்தை அறிவிக்கும்.

மனம் என்பது உணர்வு உணர்ச்சி என்று எதனாலும் பாதிக்கப்படாமல் ஆனால் நம்மை அழைக்கழிக்கும் ஒருவிதமான வெறுமை.

நம் பாலியல் பரிமாணங்களை அது முன் கூட்டியே திட்டமிடுவதால் இணை ஒத்துழைப்பு சீராக இல்லாதபோது அது சலித்தோ அல்லது திகட்டியோ விடுகிறது. மனதோடு புணர வேண்டும். அல்லது மனம் இல்லாமல் ஆக்கியதும் புணர வேண்டும்.

நயன்தாராவுக்கு இதில் எல்லாம் கடும் சிக்கல் இருக்கும். அது கட்டமைக்கும் உளவியல் கோட்டையில் இப்படி சில ஜன்னகளை திறந்தும் பார்க்கும். இந்த மனோபாவம் பரிதாபமானது.

கெட்ட வார்த்தைகள் வந்து விழுகிறது என்று இதயம் துடிதுடிக்க வேண்டாம்.

அது ஒரு வார்த்தை. அவ்வளவே.

ஒருமுறை நீங்கள் கெட்ட வார்த்தை பேசுவீர்களா என்று கேட்டதற்கு நான் வார்த்தையாக பேச மாட்டேன். பக்கம் பக்கமாக புதிது புதிதாக தேர்ந்தெடுத்து பேசுவேன் என்றேன்.

எல்லா கெட்ட வார்த்தைகளும் பெண் அவயவங்களை குறித்து இருக்கிறது. எனில் பெண்களை கேவலமாக நினைப்பவருக்கு அப்படி பேச முடியும் என்பதே உண்மை என்றவர் பிளாக் செய்து போனவர் போனவர்தான்.

இவர்களோடு விவாதிப்பது என்பது அர்த்தமற்ற செயல். நயன்தாரா, இங்கே நிதானமாக படிக்க வேண்டும் நீ.

கெட்ட வார்த்தை என்பதில் ஒரு சொல் எடுத்து அதன் வேர் எங்கே என்று பார்க்க அது புழக்கத்தில் இருக்கும் சாதாரண வார்த்தையாக இருக்கும்.

Fuck என்றால் அது நம்மை உறுத்துவது இல்லை. ஓக்கலாமா என்றால் காது கூசுகிறது. ஓத்தல் என்பது உவத்தல் என்று சொல்லின் மருவூ.

உவத்தல் பெண்மையுடன் நளினமாக இருக்க ஓத்தல் ஆண்மையுடன் ஆங்காரமாக இருக்க தடுமாற்றம் வருகிறது.

மேட்டர் என்ற சொல்லுக்கு இங்கே அர்த்தம் வேறு. ஆனால் அறிவியலில் தத்துவத்தில் மேட்டர் என்றால் அதன் கனம் வேறு. மேட்டர் என்றால் நமக்கு ஐன்ஸ்டென் நினைவோ ஹெகலின் நினைவோ வர வேண்டும். ஆனால்?

ஒரு நடிகனை பார்த்து அரசியல்வாதி பார்த்து வளரும் குழந்தைக்கு என்ன நேருமோ அதுதான் இப்போது நம் நாட்டில் நிகழ்கிறது.

இதை வேறு வழியின்றி பலவீனமாக நாம் ஏற்றுக்கொள்ளும்போதுதான் நயன்தாராவின் கை ஓங்கும். எகிறி விடுங்கள். அதை அது screenshot எடுத்து போட்டு காட்டினால் நமக்கு ஒன்றும் நட்டம் இல்லை.

போலி மரியாதை காட்டுவது எப்படி அபத்தமோ அப்படித்தான் நாம் நமக்கே வெட்கப்பட்டு மௌனமாக இருப்பதும். நாம் எல்லோரும் சமமான மனிதர்கள்.

குடும்ப கௌரவம் என்ற போலியான ஒன்று வறட்டு கௌரவம் எப்படி நம்மை சுட்டு சுட்டு பொசுக்கி எடுக்குமோ அப்படித்தான் இந்த வெட்கம், மானம், ரோஷம் எல்லாம்.

உங்களுக்கு நாட்டில் என்ன விருது வேண்டுமோ அதை நீங்களே முதலில் உங்களுக்கு கொடுத்து கொள்ளுங்கள். சமூகம் தருவது என்பது சமூகத்தை அடையாளப்படுத்தி கொள்ளவே.

நேரு முதல் கமலாதாஸ் வரை உள்ள வாழ்க்கை வரலாற்றை நாம் ஆழ்ந்து படித்தால் பலவும் மாறிவிடும். அவர்கள் சொந்த வாழ்க்கையில் எத்தனையோ உண்டு. டயானா? மோனிகா லேவின்சி?

பாலியல் வழியாக ஒருவர் உங்களை அவமானப்படுத்தி விட முடியாது. காலம் மாறி விட்டது. அது என் சொந்த விருப்பம் என்று கூறிவிட்டால் போதும். சட்டம் அதை ஏற்று கொள்கிறது.

ஆண்கள் மட்டுமே இப்படி பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்கள் என்ற ஒரு பக்க பார்வையை விட்டுவிட வேண்டும். பெண்களும் உண்டு. அதை நாம் ஏற்க வேண்டும். இதற்கு ஆதாரங்கள் என்பது மிக அதிகம்.

சாட் செக்ஸ், கால் வீடியோ செக்ஸ் அதை தாண்டி உடலுறவு என்பது எல்லாம் எத்தனை நாள், எத்தனை முறை, எத்தனை நபர்களுடன் நீடிக்க முடியும்?

கணவனுக்கு பிடித்தால் மனைவிக்கு பிடிக்காது. மனைவிக்கு பிடித்த ரசனை கணவனுக்கு தோன்றாது. இருவரும் ஆசைப்படும்போது காலம் தடுக்கும்.

காதல் வழியே காமம் திரள காமம் முடியவும் அன்பு திரள வேண்டும். அது மட்டுமே உடலுறவு. ஒழுக விடுவது அல்ல உடலுறவு. நம் நயன்தாராவுக்கு இந்த ஆழ்மனச்சிக்கல் அதிகம்தான்.

ஆனால் நாம் அதை எப்படி நிர்வகிக்க வேண்டும்?

ஒரு படைப்பாளியாக இதை பார்க்க நமக்கு எத்தனையோ தகவல்கள் கிடைக்கும். அதை படிக்க படிக்க நம் இணை மட்டும் அல்ல ஏறத்தாழ எல்லா உறவுகளையும் அதன் சிக்கல்களையும் புரிந்து கொள்ள முடியும். டால்ஸ்டாய் குடும்ப பிரச்சனைகள் பற்றி சொல்லி முடியாது. சாக்ரடீஸ் கொஞ்சமாகவா அனுபவித்தார்?

நயன்தாரா இங்கே மிக்சர் சாப்பிடும் ஒரு எடுப்பு. அல்லக்கை. அவ்வளவே. சாலையில் நாம் நடக்க பத்து நபர்கள் நம்மை பார்ப்பார்கள். ஒரு நாயும் பார்க்கும். ஆனால் நாம் யாரோடு பேச வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

செக்ஸ் சாட் செய்ய விரும்புபவர்கள் அதை தக்க துணையுடன் செய்யலாம். ஒருவர் மற்றொருவரின் நேரத்தை காலத்தை பொறுப்பை உணர்ந்து செய்ய வேண்டும். ஆண் பெண்ணை பெண் ஆணை மதிக்க வேண்டும். ஆழமான உணர்வுகளுக்கு உட்பட்டு எல்லைகள் மீறி வாக்கு, சத்தியம் எல்லாம் செய்யக்கூடாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த செக்ஸ் சாட் எந்த விதத்தில் தேவையாகி போனது என்பதை மனம் விட்டு பேச வேண்டும். இருவரும் ஒன்னு சிக்கிடுச்சு என்று குதூகளிக்க கூடாது. புருஷனாக, பெண்டாட்டியாக இல்லாமல் ஆண்மையும் பெண்மையும் ஆறுதல் கூறி கொள்வதுபோல் அதை நிகழ்த்த வேண்டும். ஒரு துயருக்கு வடிகால் என்று வரும் இணையை தோளில் சாய்த்துக்கொண்டு அன்பு கொடுத்து அரவணைத்து கலவி செய்ய வேண்டும். கலவி பிடிக்காது போனால் அதன் பின் பகிர ஆயிரம் உண்டு. பேசி கொள்ளுங்கள். அன்பை எப்போது எப்படி காமம் ஆக்கி வலையில் வீழ்த்தி கொள்ளலாம் என்று திட்டமிடாதீர்கள். விலகி செல்ல விரும்பினால் அன்போடு அனுப்பி விடுங்கள். Fake id ஆகி கேவலப்பட வேண்டாம்.

இப்படி ஒரு உறவு தனக்கு வாய்க்காது போக அதனாலும் நயன்தாரா தனது எரிச்சலை இப்படி காட்டி கொள்ள முடியும்.

எரொட்டிக் எழுதுவது என்பது சுலபம் அல்ல. அது நிறைய உழைப்பை கோரும் துறை. கி. ராஜநாராயணன் கோபல்ல கிராமம் நாவலில் அதை வாழ்வியலோடு பொருத்தி எடுத்து செல்வார்.

இதைப்படித்தால் ஒரு பெண் செக்ஸ் ஆர்வம் வர தன்னிடம் வருவாள் என நினைப்பது உணர்வு வணிகம். நேற்று நாயும் பன்றியும் புணர்ந்து வால் சிக்கிய வீடியோ பார்த்தேன். இதுதான் அதுவும். விதைக்கு வரும் காய்ச்சலை கவிதையாக்கி திரித்து தூது விடுவது அநாகரீகம்.

லாரன்ஸ் D. H, நாவலில் இல்லாத ஆபாசமா? அவர் எதிர்கொள்ளாத சிக்கலா? பாலியல் படைப்புகள் வழியே திருகி விழுந்து இருக்கும் சமூகத்தை விமரிசனம் செய்ய வேண்டும். அது படைப்பு. அல்லது உணர்வை மையம் செய்ய வேண்டும்.

ஆனால்,

நயன்தாரா…

சர்க்கஸ் பபூன் மிக முக்கியமான ஒரு நபர். இங்கே நீ கோமாளியாக இருக்க எந்த தடையும் இல்லை. முன்பே நான் உனக்கு கட்டுரைகள் போட்டு விட்டேன். ஆக அசிங்கமான அந்த பதிவுக்கு பின்னும் நீ இப்படி இருப்பது வேதனை. மனநோய் தீவிரமாக இருக்கிறது. கவனமாக இருக்கவும். முன்பே நான் என் மெயில் கொடுத்து பேச சொன்னேன். அதையும் உன்னால் செய்ய முடியவில்லை. அப்போதே உன் குற்றப்பாங்கு புரிந்து போனது. இனி மனிதனாக முயற்சி செய்யலாம்.

பெண்களுக்கு…

நீங்கள் எவ்வளவு உருகினாலும் உங்களுக்கு இங்கே உண்மையான தோழமைகள் என்பது ஒன்று அல்லது மூன்று நபர்களை தாண்டி செல்லாது. இங்கே நீங்கள் எழுத வந்திருப்பதால் எழுத்துக்கள் குறித்து எழுத்தாளர் குறித்து பேசுங்கள்.

சமகால, முந்தைய எழுத்தாளர் குறித்து பேசவும் விவாதிக்கவும் பகிரவும் தொடங்கினால் அதுவே இதுபோன்ற தொல்லைகளில் இருந்து விடுவிக்கும். மாறாக வடிவேல் மீம்ஸ் போட்டால் ஒரு மாதிரியாக மட்டுமே பார்க்க தோன்றும்.

அறிவுஜீவியாக வர வேண்டும் என்று நினைக்க உங்கள் பெர்சனாலிட்டி கூடும். ஆண் கிட்டே வர தயங்குவான். உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் புதிய புத்தகம், சேனல்ஸ், நீங்கள் எழுதிய படைப்பின் பிரதி, இலக்கியம் சார்ந்த அப்ளிகேஷன் என்று பதிவுகள் போட ஆண் சற்றே யோசிப்பான்.

ஆண்களுக்கு…

சொல்ல ஒன்றும் இல்லை.

இறுதியாக…

இத்தோடு FAKE ID பற்றிய பதிவு போதும் என்று தோன்றுகிறது.

கட்டுரைக்கு பொருத்தமற்ற தலைப்பு என்றாலும் பரவாயில்லை என்றே நினைத்தேன்.

EROTIC PORN, SEX என்ற வார்த்தைகள் குறித்து இருக்கும் மதி மயக்கம், மன பதட்டம், பயம், குழப்பம் இவற்றை எல்லாம் விட்டு விட்டு உங்களுக்குள் அதுபற்றி என்ன உண்மை என்று தோன்றுகிறதோ அதை வெளியிட்டு விவாதித்து அடுத்தடுத்த இலக்குகள் நோக்கி விரைந்து பறந்து செல்லுங்கள்.

வாழ்க்கையில் வாழ்வதை விட வேறு முக்கியமானது ஒன்றும் இல்லை.

காமம் எல்லோருக்குமானதுதான்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.