நான் எங்கிருக்கிறேன்?
என்னை தூக்கிச்செல்வது யார்?
எது என்னை அழைக்கிறது?
யாரை தொடர்கிறேன்?
என்னுள் பேசுபவர்கள்
எங்கிருந்து பேசுகிறார்கள்?
என் உறவினர் எங்கே?
நீங்களும் நானும் இனி
யாருக்கு யார் ஆவோம்?
நான் காண்பதில் நீங்கள்
எங்கு உள்ளீர்கள்?
காலத்தை கண்டறிந்த
மடையன் எங்கிருக்கிறான்?
உங்கள் மொழியில்
கலவாது இறவாதிருக்கும்
இரசாயன சேர்க்கை எவ்வளவு?
பிணங்களை இன்னும்
புதைப்பதும் எரிப்பதும் எதற்கு?
இந்த இரவு எப்படி தொங்குகிறது?
இது யார் கவிதை?
நீங்கள் ஏன் வாசிக்கிறீர்கள்?
இவை ஒன்றுக்கும் பதிலற்ற
என்னை
இன்னுமா நம்புகிறீர்…