ஒரு சொல்
நகரும் பொழுதில்
ஒரு சொல்
திணறும்
ஒரு வரியின்
எதிரெதிர் முனையில்
அவளும் நானும்.
அவள் உள்ளிருக்கும்
என்னை
என் உள்ளிருக்கும்
அவளை
ஒவ்வொரு வரியின்
ஒவ்வொரு சொல்லும்
ஒளித்து வைக்கிறது
என்னிடமிருக்கும் அவளை
அவளிடமிருக்கும் என்னை.
அவள் அவனை
நீங்குகையில்
அது
நான்தான் என்கிறாள்
என்னிடம்.
அச்சொல் நகர்கிறது
மயானம் நோக்கி.
அவன் அவளை
நெருங்குகையில்
அது நீதான் என்கிறான்
அவளிடம்.
அச்சொல் மிளிர்கிறது
வரியில் முத்தாய்ப்பாக.
அவள் சொல்லற்று
மௌனம் கொள்ள
அவன் சொல்லொடு
துயரம் கொள்ள
வரியில் சிக்கி
துண்டாடி நிற்கும்
காதலின் வடுக்களை
வாசிக்கும் நீ இதை
கவிதை என்கிறாய்…
உன்னருகில் இருக்கும்
உன்னவளின் மனதில்
இருக்கும் அவன்
அப்படியா என்கிறான்.
Tag Archives: குற்றநோக்கு
சப்தத்தின் சாரல்
நான் என்னை
நம்புவதற்கு சில சமயம்…
நீண்டதூரம் நடக்கவோ
எனக்குள் ஏதேனும் பாடவோ
மெள்ள சிரிக்கவோ
முன்முடியை ஒதுக்கவோ
செடியொன்று நடவோ…
என்னை நான்
நம்புவதற்கு சில சமயம்…
வான நுனியில் மிதந்து
இசைத்துளியில் சிதறி
பூக்களில் ஈரமாய் துளிர்த்து
கண்ணோரம் மிதக்கும்
காற்றுக்குள் ஒளியென படர்ந்து
மோனலிஸாவின் மூச்சில்
மின்னலை ஊன்றியபடி….
நீண்டதோர் மறதியில்
என்னை ரகசியமாய்
நம்புகிறேன் என்பதால்தான்…
குளிரில் கூடு கட்டி
மீன்களின் கனவில்
பூக்களை விதைத்து
ஆகாயத்தை நெய்கிறேன்.
நம்பிக்கைதான்…
சாளரம் மூடி அதன்
சாளரம் திறக்கும் சாவி.
பூ மிதித்த பூக்கள்
அவ்வளவு ரகசியமாக
இந்த கவிதையை எழுதினேன்.
சாலையில் பள்ளம் நிரப்பும்
ஒருவனைக்கொண்டு
சொற்களை வாங்கி
குவித்து மேடாக்கி
ஒரு விதையை அதனுள்
ஊன்றி வைத்தேன்.
கவிதைகள் எப்போதும்
தண்டவாளத்தில் மட்டுமே
பயணிக்க கூடியவை.
மேலும்…
சரண்யாவும் நானும்
எங்கள் காதலுக்காக
மரணத்தை உருவாக்கிய
அதே தண்டவாளத்தில்தான்
இக்கவிதை
தன் உயிரையும் என் உயிரையும்
கையில் பிடித்துக்கொண்டு
சுற்றி சுற்றி வர வேண்டும்.
மரணத்துக்கு பின்
சரண்யா என்னோடு இல்லை.
அவளுக்கு துயரமான
ஒரு செய்தி இருந்தது.
அவள் மனம் உண்மையில்
காதலித்தது வெங்கையாவை.
வெங்கையா இப்போது
இதே தண்டவாளத்தில்
மூணு சீட்டு ஆடுகிறான்.
சரண்யா போனபிறகு
தனிமைக்கு விருந்தாக
கவிதைகள் எழுதுவேன்.
எழுதும் கவிதைகள்
பயணிக்கின்றன ஆனால்
ஒருபோதும் திரும்பாது.
சரண்யா இப்போது
ஒரு வேடுவன் ஆவியுடன்
ஊர் சுற்றி கொண்டிருப்பதாக
தகவல் வந்துள்ளது.
எல்லா கவிதைக்கும்
ஒரு ரகசியம் உண்டு.
அதை ஒருபோதும்
கவிதைகளில் நாமே
கண்டறிய முடியாது.
ஒரு ஆவியின் கனவில்
வந்த கவிதையை
நாளை நான் எழுதுவேன்.
சொல் நகரும் கவிதை
அச்சொல்
தன்னை தொலைக்க
வரிகளில் நிசப்தம்.
வழிந்த கண்ணீரில்
ஒழுகும் இரவொன்றில்
அச்சொல் நனைய
வரிகளில் சப்தம்.
எங்கோ நிகழ்ந்து
முடிந்த மரணத்தின்
சடை பிடித்த பகலில்
அச்சொல் திகைக்க
வரிகளில் தயக்கம்.
யாருமற்ற நாக்கொன்றில்
துயிலும் அச்சொல்…
கனவின் வர்ணத்தில்
ருசி முதிர்ந்து விழிக்க
வரிகளில் மயக்கம்.
அலையும் காற்றுக்குள்
அலையும் கவிதைக்குள்
அலையும் மனதுக்குள்
அலையும் அச்சொல்லில்
அலைகிறேன் நான்
வரிகளில் நழுவியவாறு.
நீலாம்பரியின் நாக்கு
இப்படித்தான் என்பதில்
எந்த நிச்சயமும் இல்லாதபோது
இந்த கவிதையை படிக்கலாம்.
ஒரு நகரம் கிராமத்தை
மின்மினி கொண்டு
அளப்பதை போல.
உங்களை விசை கொண்டு
அழுத்தும் அர்த்தங்களோ
நீங்கள் நியமிக்க வேண்டிய
கவனத்தின் திருகு ஓட்டைகளோ
இதில் இல்லை என்பதால்
நீலத்தில் சபிக்கப்பட்ட உங்கள்
குளிர் கண்ணாடி அணிந்து
முன் வரலாம் படிக்க.
வாசிக்க லகுவானது…
வாசிக்கும்போது
உங்களின் பரமவைரியின்
நீங்காத நினைவும்
கொதித்திருக்கும் இந்நாளும்
சற்று மறக்கக்கூடும்
என்பதற்காக கூட
இன்னும்
வாசிக்கலாம் ஒரு முறை.
நீதிபதி சிந்திய மைத்துளி
பட்டப்பகலில்
எழுதிய கவிதை
பட்டப்பகலில் மரித்தது.
மரித்த அக்கவிதையை
ஊர்க்குருவிகள்
பட்டப்பகலில் உண்டன.
கவிதை உண்ட
குருவிகள் பறந்தன
பட்டப்பகலில்…
பறந்த குருவிகள்
முட்டையிட்டன
பட்டப்பகலில்…
பொறிந்தன முட்டைகள்
பட்டப்பகலில்…
பகல் குஞ்சுகள்
பறந்தன வெளியில்
பட்டப்பகலில்…
அதனை
பட்டப்பகலில் பார்த்தவன்
எழுதினான் கவிதையொன்று
பட்டப்பகலில்…
பட்டப்பகலில்
எழுதிய கவிதை
பட்டப்பகலில் மரித்தது.
மழை பெயல் மறந்த கழை (பாகம் 3)🔞
பாகம் 3
அன்று இரவு மணி பதினொன்று.
நரேஷ் போனுக்கு சாந்தி கால் செய்தாள்.
தூங்கிட்டியா?
இல்ல. சொல்லு.
பாடம் படிக்கணுமா?
இல்ல. சும்மா முழிச்சிட்டு இருக்கேன். நாளைக்கி காலேஜ் போகலை.
ஏன்?
எனக்கு போக பிடிக்கலை.
போக பிடிக்கணும். நல்லா படி.
ம்ம்ம்.
நரேஷ்…
சொல்லு.
இப்ப எங்கே இருக்க?
என் ரூமில்.
வாட்ஸாப்பில் வீடியோ கால் பண்ணவா?
வேண்டாம். நீ தூங்கு. ஷான்.
சாந்தி எந்த அவகாசமும் இன்றி உடனே அவனை கூப்பிட்டாள்.
🎯🎯🎯🎯🎯🎯
நரேஷ் அவள் முகத்தை பார்த்தான்.
சாந்தி இப்போது மெல்ல போனை இறக்கினாள்.
எந்த உடையும் இன்றி அவள் இருந்தாள். தன் ஒரு மார்பகத்தை ஒரு கையால் பற்றி கொண்டிருந்தாள்.
அந்த காமிரா அவளை துரத்தி துரத்தி நரேஷுக்கு ஒவ்வொரு அங்கமாக காட்டிகொண்டிருந்தது.
நன்கு சவரம் செய்த தன் கீழ் உறுப்பை காட்டும்போது நரேஷ் வியர்த்து கொண்டிருந்தான்.
இரு விரல்களை துளைக்குள் செலுத்தி லாவகமாக அதை பிளந்து காட்டினாள்.
உள்ளே ரத்தமாய் சிவந்திருந்த இருளுக்குள் நரேஷின் இருபது வயது ஆண்மை விழிக்க ஆரம்பித்தது.
ஷான்… என்ன இது… வேண்டாம். ப்ளீஸ்.
இப்போது பேசாதே. நீயும் உன் உடைகளை கழற்று.
அவசரமாக கழற்றியதும் அவன் ஆண்மை முறுக்கேறி இருந்தது.
அனிச்சையாக தன் காமிராவில் அதை தொகுத்தான் நரேஷ்.
இருவரின் வெட்கமும் அறவே பொலிவிழந்து உயிரின் உண்மையான வாழ்வு அங்கே வெளிப்பட துவங்கியது.
🎯🎯🎯🎯🎯🎯
நரேஷ்….
ஷான்…
இயர் போன் மாட்டிக்க. இப்போ நான் கால் பண்றேன்.
சரி.
*********
*********
ஹலோ…
ஷான்…
ட்ரஸ் போட்டியா…
இல்ல…போட்டுக்கவா?
வேண்டாம் போட்டுக்காத… இரு…
ம்ம்ம்.
சற்று நிசப்தம்.
இன்னும் நிசப்தம்.
ஷான்…அடிக்குரலில் அழைத்தான்.
ம்ம்ம்ம்…
இந்த வினோத முனகல் அவனை தீவிரமாக்கியது. அவன் அவனுக்கு அப்பாற்பட்டு வழிந்து கொண்டிருக்கும் உணர்வை அடைந்தான்.
மனதை கல்லாக்கி கொள்ள தீவிரம் கொண்டான். பிஸ்னெஸ் அனலிட்டிக்ஸ் பாடத்தை நினைத்து கொண்டான்.
ஷான்…
ஸ்ஸ்ஸ்…ம்ம்…வரேன்.
என்ன செய்கிறாள்?
நரேஷ்… அவள் அழைத்தாள்.
ஷான் என்ன பண்றே.
நீ இப்ப இங்கே இருந்தா என்னை என்னடா செய்வே? கொஞ்சினாள்.
சாந்தியின் குரல் முற்றிலும் மாறி இருந்தது. அது சாந்தி இல்லை என்று நினைக்கும் அளவு கருணையும் அன்பும் நிரம்பி இருந்தது. மந்திரக்குரலை நோக்கி நழுவி நழுவி விரைந்தான் நரேஷ்.
🎯🎯🎯🎯🎯🎯
என்ன செய்யணும்.
என்ன செய்வே?
உம் மேல் படுப்பேன்.
ம்ம்ம்
கிஸ் பண்ணுவேன்.
எங்கே?
பூப்ஸ் முழுக்க.
ம்ம்ம்… அப்பறம்..
உன் புஸியில் கிஸ் பண்ணுவேன்.
ம்ம்ம்…அப்பறம்…
பூப்ஸ்ல ஷக் பண்ணுவேன்.
ம்ம்ம்
அது ரெண்டையும் விடாம கசக்குவேன்..
ம்ம்ம்…
அப்போ நீ….
நான்..?
என்னோடதை எடுத்து…?
எடுத்து?
கீழ… உனக்குஉள்ளே விட்டுக்கணும்…
மாட்டேன்.
ஏண்டி…
நீயாதாண்டா செய்யணும் அதை.
இருட்டுல ஹோல் தெரியாது ஷான்.
கீழ தடவி ஒவ்வொரு விரலா விட்டு விட்டு பாரு. ஹோல் தெரியும்.
அக்கணமே நரேஷ் தன் முழு உடலும் மெல்ல குலுங்குவதை அறிந்தான்.
ஷான்….இப்ப…
நரேஷ்…..
நரேஷ் கனவில் விரட்டும் தோட்டாவை போல் இயங்கினான்.
ஷான்…. எனக்கு வந்துருச்சு. போயிடுச்சு…
நீள் மௌனம்.
ஷான்….?
ம்ம்ம்.
உனக்கு?
அப்பவே ஆயிடுச்சு. உனக்கு கம்பெனி குடுத்தேன். அவ்ளோதான்.
எப்படி?
மாஸ்டெர்பேட் பண்ணிட்டேன். பழகின விஷயம்தானே எனக்கு அது.
நரேஷின் தொடை எங்கும் தீவிரமாய் வழிந்திருந்த திரவம் வேகமாய் காய ஆரம்பித்தபோது அவன் தொடை முடிகள் அனைத்திலும் ஈர்ப்பு நிறைந்திருந்தது.
நரேஷுக்கு இப்போது கைகள் நடுங்கினாலும் ஏதேனும் சாந்தியோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.
அவளுக்கும் கூட.
🎯🎯🎯🎯🎯🎯
ஷான்…
அவ்ளோதான் நரேஷ். முடிஞ்சுபோச்சு.
இன்னொரு தடவை செய்யணும்டி.
செய்யலாம்.
எப்போ?
இன்னிக்கே… போதுமா?
தேங்க்ஸ்டி.
எதுக்கு?
சொல்ல தெரியல. காது மடல் கூட ஹீட்டா இருக்கு உடம்பு இப்போவும் அதிருது. ரொம்ப தூரம் அலுப்பே இல்லாம ரன்னிங் போற மாதிரி இருக்கு.
அப்படித்தான் இருக்கும்.
எப்பவுமே இருக்குமா?
உடம்பு சலிக்கும் வரை.
எனக்கு சலிக்காது ஷான்.
சலிக்கும். உடம்பு சலிச்சு போய்டும்.
எப்படி?
உங்க வீட்டுல எலி இருக்கா?
அதுக்கு வாய்ப்பே இல்ல.
எங்க வீட்டுல நிறைய இருக்கு.
ஓ…
நிறைய இருக்கு. ஒருநாள் ராத்திரி எலிகள் கீச் கீச்ன்னு சத்தம். ரொம்ப நேரம் கேட்டுச்சு. போய் பார்த்தா ரெண்டு பெரிய எலிகள் அது செஞ்சுட்டு இருக்கு.
அப்போ எங்க அப்பா இருக்கார்ல… அவரு ஒரு பெரிய உலக்கையை எடுத்து ஒரே அடியில் ரெண்டையும் மண்டையில் ஓங்கி அறைஞ்சு கொன்னார்.
வீடு முழுக்க ப்ளக் னு ரத்தம். என் மூஞ்சில் கூட அப்ப சரட்டுன்னு துளிகளா தெறிச்சிச்சு.
நரேஷ் ஆடிப்போனான்.
ஷான்… என்ன இது?
ம். அதான் நரேஷ். ஒரு பொண்ணு அவளோட ரத்தத்தில் குளிச்சிட்டு வந்ததும் ஒரு ஆம்பிளை புழுவை வளர்த்து காத்திட்டு இருக்கான். அவன் உறுப்பை அவள் உடம்புக்குள்ள திணிக்கணும். புழுவை கக்கணும். புழுவை பெக்கணும்.
ஷான்…
பார்த்தே இல்ல இப்ப நீ… எங்களுக்கு அது எவ்ளோ சாஃப்ட்டா இருக்கும் தெரியுமா?
தெரியாது…
பூ மாதிரி இருக்கும். அதுக்குள்ள துருப்பிடிச்ச கொக்கி கம்பியை விட்டு குடல் வரைக்கும் வெளியே இழுத்து அப்படி என்னடா பாக்கறீங்க?
வெறும் விஷத்தை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தாலும் இப்படி சிந்திக்க முடியாதே?
மிருகங்கள் கூட ஆணுக்கு ஆண்தான் அடிச்சிக்கும். நீங்க எல்லோரும் ஒண்ணா சேர்ந்து எங்களை ஏண்டா இப்படி குதறி எடுக்கறீங்க?
ஷான்….போதும்..ப்ளீஸ்…
உன்னை சொல்லலை நரேஷ். ப்ளீஸ்…
எனக்கு புரியுது ஷான்.
நான் தோட்டத்தில், மொட்டை மாடியில் வாசலில் நின்னா போதும்… அப்பா என்னை தாண்டி போகும்போது எல்லாம் சிரிச்சிட்டே கேப்பார்…
“யாரைம்மா தேடற? கீழே ரொம்ப அரிப்பா இருக்காம்மா உனக்குன்னு”?
எவனாச்சும் டிவி சினிமாவில் கட்டி பிடிச்சா கூட நான் எந்திரிச்சு போய்டுவேன். நான் திருப்பி கேட்கலாம், “ஏண்டா நாயே நீ வெக்கமில்லாம பத்தாம் கிளாஸ் பொண்ணை போயும் போயும் புண்டைக்காக சொரண்டிட்டு நிக்கிறியே. என்கிட்டே வாயேன்” னு சொல்ல முடியும். இந்த குடும்பம் இல்ல நாறிடும்.
ஷான்… கொஞ்சம்…
இரு. பேசிடறேன். உன்கிட்ட நேர்மை இருக்கு. நீ காதலிக்கறேன் னு சொன்னே. சின்ன பையன். அப்படித்தான் பேசுவே. அட்மைர் இருக்கிறது தப்பு இல்ல.
ஆனா இப்போ நிறைய சுதந்திரம் இருக்கு. ஸோ நீ நான் எல்லோருமே மறைக்க முடியாத நிர்வாணம்தான்.
இது பொய் னு சொல்லி அதை நம்ப வைக்கிறவனை சம உரிமை னு சொல்லி குழப்பி விடரவனை இது பெண்ணடிமை நான்தான் காப்பாத்துவேன் னு சொல்ற எல்லா நாயையும் நான் செருப்பால அடிப்பேன்.
என் அம்மா செத்தப்ப எனக்கு மூணு வயசு. என் பத்து வயசில் என் அப்பா மாதிரி தங்கமான மனுஷனை நான் பார்த்ததே இல்லை.
பதினாறு வயசில் வயசுக்கு வந்தேன். தலை குளிச்சு எத்தனை கோவிலுக்கு கூட்டிட்டு போனார் தெரியுமா? எனக்கு எத்தனை நகை புடவை வாங்கி தந்திருக்கார் தெரியுமா?
இப்ப அவருக்கு என்ன ஆச்சு… தெரியலை. எனக்கு சத்தியமா தெரியல. எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் என்ன பண்ணட்டும் நரேஷ்?
சாந்தி அன்று அழுதாள். அவள் மீது பரவிக்கிடந்த மொத்த ஆண்களின் கண்களும் கருகி உதிரும் வரை செருமி செருமி அழுது தீர்த்தாள்.
நரேஷின் கைகள் போனை பிடித்தபடி நடுங்கி கொண்டே இருந்தன. அவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.
சற்று நேரம் மௌனம்.
நரேஷ்…
ஷான்…
ஆசையா கேட்டியே… வா செய்யலாம்.
வேண்டாம் என்றான் உறுதியாக.
இல்ல…என் கண்ணு…வாடா…
வேண்டாம் ஷான். இப்ப உடம்புனா என்னன்னு புரிஞ்சுடுச்சு. நீ தேவதை.
சாந்தி வெறுமையாய் சிரித்தாள்.
நரேஷ்…ஒண்ணு செய்வியா. எனக்காக?
எது வேண்டுமானாலும்… சொல்லு ஷான்.
நீ நல்லா படி. படிச்சு பிலிப் கோட்லர் மாதிரி நிறைய புஸ்தகம் எழுதணும்.
கண்டிப்பா ஷான்.
அதுக்கு நீ…
நான்…
இனி நாம் போனில் பேசிக்க வேண்டாம். இனிமேல் நாம் தொடர்பு கொள்ள வேண்டாம். எனக்கு தெரியும் என்னை கண்டுபிடிக்கறது உனக்கு ரொம்ப ஈஸி னு. ஆனா அப்படி ஒருபோதும் செய்யாதே.
எனக்கு உன்னை பிடிக்கும். உன்னை என் காதலனா இப்போ பார்க்கிறேன்.
அது நம்ம மனசில் ஆரம்பிச்சு மனசோடவே போகட்டும். உன் வாழ்க்கை வேறு. எனக்காக நீ இதை செய்வியா நரேஷ்…. ப்ளீஸ்…
ஷான்… கண்டிப்பா செய்வேன்.
ஸோ..
ஸோ…நாளைக்கு நான் காலேஜ் போய்டறேன். சரியா?
🎯🎯🎯🎯🎯🎯
இரண்டு பக்கமும் போன் அணைந்தது. விடிவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அது மெதுவாக விடியட்டும்.
அறிவில் ஒளி வந்தபின் இரவென்ன பகலென்ன?
(முற்றிற்று)
மழை பெயல் மறந்த கழை (பாகம் 2)🔞
பாகம் 2
நரேஷ் மீண்டும் மீண்டும் அந்த படத்தை எடுத்து பார்க்கும் போதெல்லாம் பத்து நொடிகளுக்கு மேல் அவைகளை அவனால் பார்க்க முடியவில்லை. அதில் என்ட்லெஸ் லவ் ஃப்ரூக் ஷீல்ட்ஸின் சாயல் இருந்ததாக அவன் மனதுக்கு தெரிந்தது.
அவனை ஒருபுறம் கழிவிரக்கமும் குற்ற உணர்ச்சியும் கொடுமைப்படுத்தின. மறுகணம் ஆண்மையும் ஆவேசமும் முட்டி மோதின.
நாயகிகள் அவன் மனதை நிறைத்த காலங்கள் என்ற ஒன்று இருந்தது. அவர்கள் அந்த தொழில் மூலம் பணத்தை வாரி எடுத்து சென்றவர்கள்.
ஒவ்வொரு ஆடை அவிழ்ப்புக்கும் பின்னே சர்வதேச கரென்சிகள் மழையாய் உதிர்ந்தன. சாட்டிலைட்டில் படுக்கை காட்சிகள் குவிந்து நிரம்பிய உலகம்.
சாந்திக்கும் அந்த நீல உலக காட்சிகள் எல்லாம் மொபைலில் சொடுக்கிடும் போதெல்லாம் கிடைத்திருக்கும்.
நரேஷ் வாட்ஸாப்பை உயிரூட்டினான்.
இரவு அவனை குரூரமாக ஆனந்தமாக பார்த்து கொண்டே இருந்தது.
🎯🎯🎯🎯🎯🎯
சாந்தி இருந்தாள்.
ஷான்…
என்னடா…
நான் அதை அழிச்சிட்டேன்.
நம்பிட்டேன்.
ஒண்ணு கேட்கவா?
என்ன…
நீ இதுக்கு முன்னாடி… இப்படி…
ஏன் கேக்கிறே? நீ பத்தினி புண்…..கிட்டே மட்டும்தான் போவியா?
முதல் அறை அவன் கன்னத்தில் விழுந்தது.
கெட்ட கெட்ட வார்த்தையா நீ பேசறே…
கெட்ட வார்த்தைனா…
இப்ப நீ பேசறது, பண்றது எல்லாம்.
ம்ம்ம்… நரேஷ், உன்னை விட பத்து வயசு மூத்தவ கிட்ட என்கிட்டே லவ் பண்றேன்னு சொல்றது மட்டும் என்ன? அடல்ட்ரி…
இல்ல ஷான். அது அன்பு.
ஆம்பிளையோட அன்பு அவனுக்கு கீழே ஒழுகிட்டா போய்டும் நரேஷ்….
நீ கேவலப்படுத்தி பேசறே.
அப்போ போய்டேன்.
நான் போறேன்.
அப்போது நரேஷ் வாட்ஸாப்பில் இருந்து கோபமாய் வெளியேறினானே தவிர நெட்டில் இருந்து அல்ல.
மீண்டும் பத்து நிமிடங்கள் கழித்து அங்கே சென்ற போது சாந்தி அங்குதான் இருந்தாள்.
ஷான்….
இன்னுமா போகலை?
இணைப்பை முடித்து கொண்டான்.
🎯🎯🎯🎯🎯🎯
நரேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவசரப்பட்டு இழந்து விட்டோம் என்று மனம் பற்றி எரிந்து அவனை சபித்து கொண்டே இருந்தது.
ஆறுதலாக பால் வெர்லைன் கவிதை தொகுப்பை எடுத்து கொண்டான்.
அந்த கவிதைகளில் நரேஷ் எந்த வரியிலும் தன் மனதை செலுத்த முடியவில்லை. மீண்டும் புத்தகத்தை மடித்து வைத்தான்.
தன்னை நிதானிக்க முயற்சி செய்தான். என்ன நிகழ்கிறது எனக்குள்? ஏன் நான் சாந்தியிடம் தோற்று கொண்டிருக்கிறேன்.
கண்ணாடியில் சென்று முகத்தை பார்த்து கொண்டான். காமத்தின் வரிகள் எந்த பொய்யுமின்றி தெரிகிறதா என்பதை தேடினான். நரேஷின் அலங்கோலமான மனதின் எல்லா நுனியிலும் விரசம் பூத்து துளிர் விட்டு கொண்டிருந்தது.
காதலின் இதயம் காமத்திற்குள் மட்டுமே இருக்க முடியுமா? சாந்தி அவனுக்குள் குவிந்து சென்று கொண்டே இருப்பதை உணர்ந்தான். இணையற்ற அப்பயணம் அவன் உணர்வை கொளுத்திக்கொண்டு
பயணித்தது.
சாந்தி மௌனமாக அமைதியாக புன்னகை புரிந்தாள். அவள் விரித்த இரு கரங்களில் ஒரு கணம் திகைத்து பின்னர் அடங்கினான்.
வெளியில் தூங்குவதற்கான இருள் வந்து சேர்ந்தது. அவன் அப்போது அவனிடம் இல்லை. போனை இயக்கினான்.
🎯🎯🎯🎯🎯🎯
ஷான்….
வா நரேஷ்… நீ வருவே னு தெரியும்.
என்னை காயப்படுத்திடாதே.
இல்ல…வா…
ஷான்….
கட்டிக்க என்னை…
ம்ம்ம்.
கிஸ் பண்ணு…
பண்றேன்.
நல்லா அழுத்தமா கொடு. உடம்பெல்லாம் குடு. சின்ன முத்தமா ஆயிரம் கொடு.
குடுக்கறேன்…
என் மேல ஏறி படுத்துக்க.
படுத்துட்டேன்.
கால விரிச்சுக்கறேன்.
அப்பறம்…
ஸ்ஸ்ஸ்… வாடா…
வந்தேன்.
ரெண்டும் எவ்ளோ பெருசு பார்த்தியா நீ?
ஷான்…
என்னடா…
எனக்கு கீழ கசியற மாதிரி இருக்கு.
கசியட்டும்.
உனக்கு இப்படி கசியுமா?
கொஞ்ச நேரம் ஆகும்.
ஷான்…
ம்ம்ம்.
நான் உங்க ஊருக்கு ஒருதரம் வரவா?
வந்து…
நாம இதே மாதிரி செய்வோம்.
அப்போ ஐ லவ் யூ னு சொன்னியே…அது?
நரேஷ் விழித்து கொண்டான்.
இப்போது அவனை சரியான இடத்தில் சாந்தி எட்டி உதைத்தாள்.
இல்ல… நீ சரி னு சொன்னா பிராமிஸா உன்னை மேரேஜ் பண்ணுவேன்.
அப்போ செய்ய வரேன் னு சொன்னது?
தப்புதான். சாரி.
இதாண்டா ஆம்பிளை னு சொன்னேன்.
மியா கலீபா படம் பார்த்து இருக்கியா?
ம்.
அவளோட கழுத்தை வெட்டறேன்னு ஒருத்தன் சொல்லி இருக்கான். எதுக்கு? ஒருத்தன் கூட செஞ்சதுக்கா? இல்ல… ஹிஜாப் போட்டு செஞ்சதுக்கு. அதான் ஆம்பிளை புத்தி. நீ மட்டும் இல்ல என் அப்பாவையும் சேர்த்துதான் சொல்றேன்.
சரி நான் போறேன்.
மொபைலை சாந்தி துண்டித்தாள்.
🎯🎯🎯🎯🎯🎯
சாந்தி மெல்ல தன் மனதின் இருக்கும் இறுக்கங்களை தளர்த்த முயன்றாள். ஒரு ஆண் மீதான வெறுப்பை நரேஷிடம் காண்பிப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றாலும் நரேஷும் ஒரு ஆண் என்பது அவளை உறுத்தியது.
அவன் தன்னை அறியாமல் அவளை கிளர்த்தி விட்டான். அவள் நரம்புகளில் காமத்தை மலர வைத்ததை அவளால் அன்று ஏற்க முடியவில்லை.
அவள் தந்தையின் ஆபாச தடவல்களை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டுதான் இருக்க முடிந்ததே தவிர அவளால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
விளிம்பு நிலை மனிதர்கள் நாயாக, பன்றியாக, சாக்கடையாக இன்று இருப்பதற்கு இல்லை. விரவி இருக்கிறார்கள். எங்கும் இருக்கிறார்கள்.
பணத்தில் அதிகாரத்தில் அந்தஸ்தில் அறிவில் விளிம்பு நிலை மனித குணம் குறியை நீட்டியபடியும் விரித்தபடியும் நைல் முதலை போல் பசித்து கிடக்கிறது.
ஒருவன் மீள முடியாத துயரத்தில் இருப்பதற்கு காரணம் அவன் வாழும் சமூகம் இடையறாது ஒரு துயரில் இருக்கிறது என்பதை உணரவேயில்லை.
அதற்கு ஏதோ ஒரு விதத்தில் தன் செயல்களும் இருக்கிறது என்பதை அவன் அறியவும் இல்லை.
மனிதன் எல்லா குழுக்களிலும் வரம்பின்றி சுற்றிக்கொண்டே இருக்கிறான். அவன் மனது அவனது இலக்குகளை மட்டும் மொய்த்து கொண்டே இருக்கிறது.
குப்பையில் காசு பொறுக்கி குப்பையை வாங்கி குப்பையோடு குப்பையாய் வாழ்ந்து முடிக்கும்போது அந்தஸ்து என்ற சொல் வந்து சேர்ந்து பரம்பரையாகி விடுகிறது. இறுதியில் பெருமை சேர்கிறது.
சாந்தி நினைத்து நினைத்து சோர்ந்து போனதே மிச்சம்.
ஆனால் நரேஷ் மட்டும் பாவம் என்று அவளுக்கு தோன்றியபோது சாந்தி தூங்கி போய் இருந்தாள்.
🎯🎯🎯🎯🎯🎯
நரேஷ் கல்லூரிக்கு சென்று வந்தான். எந்தப்பாடமும் அவன் மனதில் இல்லை.
சாந்தியின் நுட்பம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளின் தேடல் சமூக மதிப்பின் மீதான உதாசீனங்களை தீவிரமாக உருவாக்கி வைத்திருந்தது.
யோசித்தால் சாந்திகளின் கஷ்டமும் வேதனையும் சாந்திகளுக்கு சாந்திகள் உண்டாக்கியது இல்லை. சமுதாயம் கொடுத்தது என்றும் சொல்ல முடியாது.
ஒழுக்கம், கற்பு, பொருளாதாரம், நம்பிக்கைகள் அனைத்தும் அவள் யோனி சுரப்பில் அடர்ந்து வளர்ந்து அவளை மறைத்து வைத்தது.
நரேஷ் ஒன்றை புரிந்து கொண்டான். நான் எப்போதும் அவளுக்கு ஒன்றும் சொல்லவோ தரவோ இயலாது.
நாம் நம்பி கொண்டிருக்கும் உண்மைகளுக்கு அப்பால் இருக்கும் உண்மையை அவளால் மட்டும் பார்க்க முடிகிறது என்று தெரிந்து கொண்டான்.
🎯🎯🎯🎯🎯🎯
மழை பெயல் மறந்த கழை (பாகம் 1) 🔞
பாகம் 1
To determine whether observed trends and behavior found in the relationships of the descriptive analysis of….
பிஸ்னெஸ் அனலிட்டிக்ஸ் வகுப்பில் வழக்கம்போல் நரேஷால் மனம் செலுத்த முடியவில்லை.
நரேஷ், தி என்னும் மாநகரத்தில் புகழ் பெற்ற கல்லூரியில் பி பி ஏ முதல் ஆண்டு மாணவன். இளம் அறிவுஜீவி.
என்றும் வசதிக்கும் வாய்ப்புக்கும் எந்த குறையும் இல்லாத குடும்பம்.
நேற்று வரை அவனால் இந்த அனலிட்டிக்ஸ் பாடங்களை புரிந்து கொள்ள எந்த இடர்ப்பாடும் இல்லை.
இன்று இருக்கிறது. இனிமேல் இது இப்படியே இருக்கும் என்றாலும் அதனால் என்ன என்றுதான் தோன்றியது.
கல்லூரி.
பேண்ட் பாக்கெட்டில் சாம்சங் போன் மீதுதான் அவன் மொத்த கவனமும் எப்போதும் இருந்தது என்றால் அதற்கு காரணம் சாந்தி.
🎯🎯🎯🎯🎯🎯
ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தின் அருகே பாலக்கொள்ளுவில் ஒரு ரிடயர்ட் வரலாற்று ஆசிரியரின் மகள் சாந்தி.
முப்பது நான்கு வயதில் சின்ன முதுமையும் அதே சமயம் ஜிப்ஸி போல் காட்டமான அழகும் அவளுக்கு இருந்தது. நுட்பமான அறிவில் அவளுக்கு இணை அந்த குடும்பத்தில் அவள்தான்.
அவளுக்கு ஒரு மாலை நேரத்தில் போன் அழைப்பு வந்தது. நிச்சயமாக நரேஷ் அவளுக்கு போன் செய்யவில்லை.
ஆனால், அன்று விபத்து போல் ஒரு எண் மாறி விழுந்ததில் சாந்தி நரேஷ் தொடர்பு நட்பில் துவங்கி வாட்ஸாப்பில் நீந்தியது.
இரண்டு மாதங்களுக்கு முன்…
🎯🎯🎯🎯🎯🎯
ஆர் யூ ய தமிழ் கேர்ள்?
எஸ் அண்ட் அபவுட் யூ?
மீ டூ. பட் பாய்… கேன் யூ ஸ்பீக் தமிழ்?
ஐ கேன் ரீட் அண்ட் ரைட் ஆல்சோ யா…
😊😊😊😊
😀😀😀😀
ஸோ ஹியர் ஆஃப்டர் லெட்ஸ் சாட் இன் தமிழ்… வாட் யூ சே…?
வித் ஃபிளசர்…😉😉😉
🎯🎯🎯🎯🎯🎯
நீங்க என்ன பண்றீங்க அக்கா?
அக்காவெல்லாம் வேண்டாம். சும்மா ஷான் னு கூப்பிடு.
ஓகே. இப்ப கால் பண்ணவா உங்களுக்கு?
என்ன பேசணும் உனக்கு?
தெரியலை. ஆனா பேசலாமே. ப்ளீஸ்.
இரு. நான் கூப்பிடறேன்.
🎯🎯🎯🎯🎯🎯
சாந்தியும் நரேஷும் பேசினர். பேசினார்கள். பின் நாள்தோறும் அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
நரேஷ் கேட்டு கொண்டே இருந்த கேள்விகள் வழியாக அவள் இனி இந்த உலகில் நாம் இருக்க முடியாது என்று மனதளவில் தொலைத்த உலகத்துக்கு அவன் சாந்தியை கூட்டி கொண்டே போனான்.
மராத்தியில் சிவாஜி சாவந் எழுதின கர்ணன் படிச்சுருக்கியா ஷான்?
“உண்மை தன்னைப் பார்ப்பவர்களாலும் தன்னைச் செவி மடுப்பவர்களாலும் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.
உண்மை வெளிப்படும் போதெல்லாம் உள்ளது உள்ளபடியே அது வெளிப்படுகிறது. சூரியனைப்போல அது முளைத்தெழுகிறது.”… அவள் சொல்லி முடித்தபோது விசில் அடித்தான்.
வாவ்.
படிச்சிட்டே இருக்க ஒரு ஆயுள் போதுமா நரேஷ்.
இல்ல… ஆனா படிக்கறது ஒரு விதத்தில் ஜீவ மரணப்போராட்டம் இல்லியா?
ஷான், எனக்கு எல்லாம் இருக்கு. ஆனா எதுவோ இல்லை. இல்லாத அந்த ஒரு சின்ன இடைவெளியில் எதையும் பார்க்க முடியாதபடி இந்த முழு உலகமும் குறுக்கே நிக்குது.
விபரம் தெரிஞ்ச வயசில் இருந்து நான் தனியா இருக்கேன். ரொம்ப கேள்விகள் இப்பவும் எனக்கு இருக்கு ஷான்…
இருக்கணும் நரேஷ். கேள்விகள் நீ விரும்பாத போதும் உன்னை சுற்றி வரும்.
🎯🎯🎯🎯🎯🎯
சாந்தியின் தாத்தா ஆடுதுறைக்கு அருகில் கஞ்சனூர் கிராமம். ஆந்திரா பனியன் கம்பெனியில் வேலை கிடைக்க பாலக்கொள்ளு சென்றவர் பின் அந்த தொழிலில் நுட்பம் பிடித்ததும் வருமானம் வந்ததும் அங்கேயே இருந்து விட்டார்.
சாந்தி ஆந்திராவில் பிறந்தாள். இருந்தாலும் தமிழ் பெண். இருபது வயதில் அவள் அப்பா தமிழ் நாட்டு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து முப்பது வயதும் கடந்து வந்துவிட்டாள்.
இன்னும் மூன்று வருடம் கூட ஆகலாம். சனியின் பார்வை மகரத்தில் அப்படி இருக்கிறது. சாந்தியை ஆஞ்சநேயர் வாலுக்கு பொட்டு வைத்து கும்பிட்டு வர நல்லது என்றார்கள்.
சாந்தி அப்படி செய்ய மறுத்து விட்டாள்.
அவள் உலகம் என்றோ அழிந்து விட்டது. அதில் யாரும் இல்லை. நரேஷ் உள்பட.
அல்லது நரேஷ் வரும் வரை…
🎯🎯🎯🎯🎯🎯
நரேஷ் இதை புரிந்து கொண்டான். உண்மையில் சாந்திக்கு எந்த ஆறுதலும் தர அவனுக்கு தெரியவில்லை.
அவள் போட்டோ ஒருமுறை அனுப்பி வைத்தாள். சிவந்த நிறத்தில் அழகான பெண். ஒல்லியான தேகம். கண்கள் ஒளிர்ந்து இருந்தன.
அவள் மனம் எதையோ இலக்கின்றி தேடி கொண்டிருந்தாலும் அவளிடம் எல்லாம் இருக்கிறதை உறுதி செய்வது போன்ற புன்னகை.
சாந்தியை அவனுக்கு பிடித்திருந்தது.
நரேஷ் மிக வெகுளி என்று சாந்திக்கு புரிந்தது. இருப்பினும் இந்த உலகில் வெகுளிகளுக்கு என்றும் பஞ்சம் இல்லை.
🎯🎯🎯🎯🎯🎯
நரேஷ் சாந்தியிடம் சாந்தியாகவே இருந்தான். அவன் வாழ்வில் சந்தித்த பெண்கள் எப்போதும் ஒரு உவமைக்கு கூட அவனை திரும்பி பார்ப்பது இல்லை.
அவன் நிராதரவான கேள்விகளோடும் போக்கற்ற ஆற்றலுடனும் இருந்தான்.
கல்லூரியும் புத்தகங்களும் இசையும் மட்டுமே அவன் பாதைகள். அவன் விரும்பி விரும்பி வழி தவறிய பாதைகள்.
ஷான் சமீபத்தில் நரேஷை என்னவோ செய்தாள்.
சாந்திக்கு நரேஷ் என்ன மருந்தாக இருக்க முடியும்? ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால்… அந்த இருவரும் இருவருமாக மட்டுமே இருக்கின்றனர்.
🎯🎯🎯🎯🎯🎯
கல்லூரி.
பேண்ட் பாக்கெட்டில் சாம்சங் போன் மீதுதான் மொத்த கவனமும் இருந்தது என்றால் அதற்கு காரணம் சாந்தி.
இடைவேளையில் அவசரமாய் எடுத்து பார்க்க “காலேஜ் போய்ட்டியா. குட் மார்னிங்” என்று இருந்தது.
நரேஷ் நிம்மதி கொண்டான். என்ன பதில் அனுப்பலாம்? சாரி என்றா…நான் நேற்று மீண்டும் வந்த போது நீ இல்லை என்றா..
ஐ லவ் யூ என்றா…
ஐ லவ் யூ தான் சரி… இந்த வாழ்வில் சாந்தியோடு நான். இல்லை, சாந்திக்காக. சாந்திக்காக மட்டும்.
மாலையில் போன் செய்து சொல்லி விடலாம் என்று முடிவு செய்தான்.
பிஸ்னெஸ் அனலிட்டிக்ஸ் முடிந்து ப்ரோடெக்ஸன் அண்ட் ஆப்ரேஷன்ஸ் வகுப்புக்குள் பேரா. நீலமேகம் வந்தபோது அவனும் உள்ளே சென்றான்.
🎯🎯🎯🎯🎯🎯
சாந்தி விழுந்து விழுந்து சிரித்தாள்.
நீ என்னை காதலிக்கலாம். அதில் ஒரு போதும் எந்த தவறும் இல்லை. வேறு?
நரேஷுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஷான்…நீ இங்கே வந்திடு. இல்ல…நான் அங்கே வரேன்.
வந்து….
வந்து…. வந்து… ஐ லவ் யூ ஷான்.
மீண்டும் அதே சிரிப்பு சாந்தியிடமிருந்து.
நீ இங்கே எப்படி வருவே?
நரேஷ் அமைதியாக இருந்தான்.
லவ், மேரேஜ், செக்ஸ் எல்லாம் வேற வேற தெரியுமா?
ம்ம்… தெரியும்.
என்ன தெரியும்? எப்படி தெரியும்?
என்னமோ தெரியும்.
பொம்பளைய நீ எங்கெல்லாம் பார்த்திருக்க?
எல்லா இடத்திலும், வீட்டில் தெருவில் ஊரில்…
தொட்டு இருக்கியா? தடவி இருக்கியா? மோந்து பார்த்துருக்கியா? நக்கி இருக்கியா?
நரேஷ் அப்படி பார்த்தது இல்லை. அப்படி அவள் கேட்ட கணத்தில் அவன் அயர்ந்து நடுங்கினான்.
பெண்களிடம் இருக்கும் இரக்கமில்லாத அழகுகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வரலாறு இலையால் மறைக்க உத்தரவிட்டது. பெண்களின் கண்களில் இருந்து நரேஷ் பெற்றுக்கொள்ளவும் வாரி வழங்கவும் ஒன்றும் இல்லை.
பெண்களுக்கு பரிபாஷைகள் நிறைய இருந்தன. அதில் உன்மத்தம் பெருக்கும் ரகசியங்கள் அரும்பி கிடந்தன.
மார்பின் வனப்பா மான்டேஸ்கியூவா என்று யாரேனும் கேட்டால் மான்டெஸ்கியூ
என்றே நரேஷ் சொல்வான்.
சாந்திக்கும் மான்டேஸ்கியூவை நன்றாக தெரியும். ஆனால் அவள் மார்புகள் எளிதில் களைத்து போகாத ஒரு ஆண் துணை வேண்டி நின்றது.
ஃப்ரான்ஸீய சிந்தனைகள் அவள் யோனிக்கு இப்போது வேண்டாம்.
🎯🎯🎯🎯🎯🎯
நரேஷ் மொபைல் அணைத்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டான். சாந்திக்கு என்ன ஆயிற்று? அவளுக்கு என்ன வேண்டும்? என்பதை அவனால் இப்போது யூகிக்க முடியவில்லை.
பெண்ணால் ஒரு ஆணுக்கு வரும் முதல் குற்ற உணர்வு இப்போது அவனை பீடித்தது. தொல்லை கொடுத்தது.
நாம் எங்கோ தவறி இருக்கிறோம் என்ற நினைவில் நரேஷ் தடுமாறி கிடந்தான்.
சாந்தியிடம் இதை கனவென்று நினைத்து கொள்ள சொல்ல வேண்டும் என்றும் நினைத்தான். ஆயிரம் முறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள நினைத்தான்.
இப்படியே வரிசையாக அவன் சாந்தியை நினைக்க துதிக்க ஆரம்பித்தான்.
🎯🎯🎯🎯🎯🎯
சாந்திக்கு நரேஷை நினைத்து கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அவளை பொறுத்தவரை அவனிடம் மனதார அவள் படபடக்கவில்லை என்றாலும் அவன் நிச்சயம் உடைந்து போய் இருப்பான்.
பத்தாம் வகுப்பு மாஸ்டர் கீர்த்திக்கு ட்ரைஆங்கில்ஸ் பற்றி சாந்தி தரையில் அமர்ந்து சொல்லி தரும்போது அவள் அப்பா கனிகாவுக்கு கிராமர் சொல்லி தருவார்.
அடிக்கடி கோபத்தில் அடிக்க ஓங்கும் அவர் கைகள் புன்னகையில் கலந்து வதங்கி பொருளற்ற பாசம் காட்டி கனிகாவின் சின்ன இடுப்பின் மீது ஏறி தவழ்ந்து அடி போல் வந்து பிடியாய் இறுகி மயங்கி இளகி விலகுவது சாந்திக்கும் தெரியும்.
நரேஷ் தவறுகளையும் குற்றங்களையும் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தாலும் மனதின் மூலம் அதை எப்படி ஆராய வேண்டும் என அறிந்திருக்கவில்லை. அது அவனுடைய குற்றம் அல்ல.
சாந்தி நரேஷை நினைத்துக்கொண்டாள்.
🎯🎯🎯🎯🎯🎯
நரேஷ் சாந்திக்கு போன் செய்தபோது மணி மாலை ஏழு மணி. அவள் டியூஷன் முடிந்து அறையில் இருப்பாள். அவள் அப்பா வர எட்டு மணியை தாண்டலாம்.
சொல்லுடா நரேஷ்…
சாரி.
எதுக்கு?
நான் என்னென்னவோ பேசிட்டேன்.
அதில் என்ன தப்பு?
எல்லாமே.
ம்ம்ம். ஆனா ஆம்பிளை எல்லாம் ஒரே மாதிரிதான்.
இல்லை ஷான். நான் நேசிச்சேன்.
அதுக்கு ஐ லவ் யூ வேண்டாமே?
ஆனா இங்கே என்னால் படிக்க முடியலை. நீ எனக்குள்ள எங்கேயோ இருக்கே.
எங்கேனு சொல்லவா?
சொல்லு.
பேண்ட் ஜிப்பை கழட்டிட்டு பாரு.
சாந்தி…திஸ் இஸ் டூ மச்.
பட் திஸ் இஸ் நேச்சுரல்.
போதும். நிறுத்திக்க. ஷான்…
வாட்ஸாப்பில் வாடா…
🎯🎯🎯🎯🎯🎯
நரேஷ் அவனுக்குள் வாட்ஸாப் செல்ல மறுத்துக்கொண்டே இருந்தான். விரல்கள் அவனுக்கு அப்பாற்பட்டு சுழன்றன.
அவன் செல்வதற்கும் முன்பே தன் இரு மார்புகளையும் புகைப்படமாக அங்கு போட்டிருந்தாள் சாந்தி.
நரேஷ் அதை வேகமாக அழித்திருக்க வேண்டும். செய்யவில்லை. இனி அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை.
ஒரு மார்பில் சற்று பெரிய மச்சம் இருந்தது. அவளின் இரண்டு முதிர்ந்த காம்புகளும் என்னவோ போல் இருந்தன.
என்ன பேச்சே காணோம்?
இது துளியும் நல்லா இல்ல ஷான்.
வேற போஸ் வேணுமா?
நான் போறேன் ஷான்.
சரி பை.
🎯🎯🎯🎯🎯🎯
(3 வது பாகத்துடன் முடியும்)
நீ இன்னும் பேசவில்லை
காட்சிகளில் நினைவை
உண்ணும் உன் மனதில்
உனது நிழலின் கண்ணீர்.
நீ நிரம்பியது நினைவில்
அதுவோ உன் காதல்.
….அது வெறும்
நடுக்குளத்து முதலை
யூகிக்கும் ஆர்வங்கள்
அலைகளை இழுக்கும் வீடு.
நீ
இனி
வரலாம்
அல்லது…
பனியில் தூங்கும் தேள்
உன் மர்மம்.
சொல்லாத மர்மங்களில்
காதலை உதிர்த்து
உதிர்த்த காதலை
பிடித்தும் வைக்கிறது
காமத்தின் சுளுக்கை
மந்திரிக்கும் யௌவனங்கள்.
பெருகிப்பெருகி
கனன்று அடங்கி புகையும்
ஏதோ ஒரு சொல்
ஒலியற்று மொய்க்கிறதா…
அது நான்
இரவில் பிழிந்த
அமிலத்தின் கசப்பு.
கொட்ட கொட்ட ஓடி
அயர்ந்து நின்ற உன்னிடம்
தொப்பியேந்தி இரவல் கேட்கும்
என் காதலை மிச்சமிருந்தால்.
You must be logged in to post a comment.