அவள் எனக்காக
காத்திருக்கிறாள்.
நான் அவளுக்காக
காத்திருக்கிறேன்.
இருவரும் இப்படி
காத்திருக்கும்போது
காலத்தின் உள்ளே
பருவத்தின் உள்ளே
வாழ்வின் உள்ளே
ஒருவருக்காக ஒருவர்
ஒளிந்திருப்பது போல்
பாவனை செய்கிறோம்.
எனக்கென்று அவளும்
அவளுக்கென்று நானும்
ஏதேதோ செய்கிறோம்
அப்போதுதான் நாங்கள்
கேட்டிராத இசையில்
ஸ்வரமாய் அதிர்ந்து
பார்த்திராத ஓவியத்தில்
நிறங்களாய் கலந்து
எழுதாத கவிதையில்
பொருளாய் உதிர்ந்து
எங்கள் மனதுக்குள்
காட்சியாக விரிகிறோம்.
அவள்
நானாகிய பின்பு
நான்
அவளாகிய பின்பு
ஒருவரையொருவர்
விலக நேர்ந்தது.
எங்கள் பிரிவு
எங்களை மீண்டும்
தனிமைக்குள்
அழைத்து செல்கிறது.
ஒரு பறவை வானத்துடன்
பேசுவது போல்
அவள்
காதலைப்பற்றி தனக்குள்
கற்பிக்க துவங்குகிறாள்.
You must be logged in to post a comment.