ஓரறிவு கொண்டது
ரயில் பூச்சி…
விலாங்கு மீன் நினைத்து
நழுவியோடும் அதன்
பாதையில் வழுக்கி
விழுகிறது பூமியின் நிழல்.
ரயில் பூச்சி
மனிதர் உண்டு
மனிதரை கக்கி
இருள் குடைந்து
நிலவை துரத்துகிறது.
ரயில் பூச்சி
ஒரு முட்டை இட்டது.
அது பொறிந்த போது
விமானம் வந்தது.
ரயில் பூச்சியும்
விமான பறவையும்
ஒன்றையொன்று
பார்த்தபடி செல்கிறது
மனித வண்டுக்களை
சுமந்து கொண்டு…
இத்தனை காட்சிகளும்
கொண்டிருந்த
அந்த குறுக்கு சுவரை
இடித்தபின்புதான்
மூன்று கொலைகள்
விழுந்து முடிந்தன.